Thursday 24 September 2015

நன்றிக் கடன்

தரை தளத்தின் 
மூன்றாவது படியில் காத்திருக்கிறாள்
காய்ச்சல் இருமல் தலைவலி வயிற்றுவலி
இவைகள் மட்டுமே நோய்களென்று
அறிந்திருந்த அவளிடம்
புரியாத மொழியில்
அறியாத நோயை சொல்கிறார் மருத்துவர்.
அவனுக்காக
எதையும் தாங்குமவள்
கடனைத் தாங்கும்
வல்லமையை இறைஞ்சுகிறாள்
மருத்துவமனை கடவுளிடம்
அவரோ நன்றிக்கடனாக
மருத்துவர் பக்கம்.

No comments:

Post a Comment